“Book Descriptions: உலகத்தில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் “உனக்குப் பிடித்தப் பறவை எது?” எனக் கேட்டுப் பாருங்கள். கிளி, புறா, குருவி என எதை எதையோ சொல்வார்கள். அவ்வளவு ஏன்? காக்கை என்று கூட சிலர் சொல்வார்கள். ஆனால் யாருமே வாய்தவறிக் கூட ஆந்தை எனச் சொல்வதில்லை. ஆந்தைகள் மிகவும் பாவம். நானே கூட நன்கு விவரம் தெரியும்வரை ஆந்தை ஒரு பறவை என்பதை நம்பவில்லை. மிருகம் என்றே நம்பினேன். அப்படித்தான் ஆண்களும். மனிதர்களில் பாவப்பட்ட ஜீவன்கள் யார் எனக் கேட்டால் யாருமே ஆண்கள் எனச் சொல்வதில்லை. ஆண்கள் என்றால் தைரியசாலிகள், ஆம்பளப் பையன்னா பிழைச்சுக்குவான், ஆம்பளைப் புள்ளை அழக்கூடாது, ஆம்பளப் புள்ளைக்கு என்னடா கவலை என்றெல்லாம் ஏதேதோ ஆண்களைப் பற்றிச் சொல்வார்கள். அழுதால் கூட ஆம்பளைப் புள்ளை அழுவலாமா என்பார்கள். ஆனால் ஆண் எவ்வளவு பாவம் என்பது உண்மையில் சில ஆண்களுக்கு மட்டும்தான் தெரியும். உண்மையில் தைரியமும் இல்லாமல், ஆனால் வெளியில் தைரியசாலி எனப் புகழப்பட்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டும், குடும்பத்தால் படாதபாடு பட்டுக்கொண்டும் பல ஆண்கள் இருக்கிறார்கள். அப்படிப் பாவப்பட்ட ஒரு ஆணைப் பற்றியதுதான் இந்தக் கதை” DRIVE